சென்னை: பிபிசி செய்தி நிறுவனம் 2002-ம்ஆண்டு நடந்த குஜராத் கலவரம் பற்றிய ஆவணப் படத்தை வெளியிட்டிருந்தது. இது இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக இருப்பதாகக் கூறி இந்திய அரசு தடை விதித்தது.
இந்நிலையில், விசிக சார்பில் சென்னை அசோக் நகரில் உள்ள அதன் கட்சி அலுவலகத்தில் பிபிசி ஆவணப்படம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் நேற்று மாலை ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பொதுச் செயலாளர் துரை ரவிக்குமார், கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பிபிசி செய்தி நிறுவனம் 2002-ம்ஆண்டு நடந்த குஜராத் கலவரம் பற்றிய ஆவணப் படத்தை வெளியிட்டிருந்தது. இது இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக இருப்பதாகக் கூறி இந்திய அரசு தடை விதித்தது.