புதுடெல்லி: அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் ஒரு கோடிக்கும் மேற்பட்டோருக்கு அகவிலைப்படியை 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 6 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படுகிறது. விலைவாசி உயர்வை ஈடுசெய்யும் வகையில், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. நுகர்வோர் விலைப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் ஒரு கோடிக்கும் மேற்பட்டோருக்கு அகவிலைப்படியை 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தி வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.