புதுடெல்லி: அக்னி வீரர்கள் திட்டத்தில் இனி முதலில் ஆன்லைன் முறையில் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.
அக்னி வீரர்கள் திட்டத்தில் பாதுகாப்பு படைகளின் முப்படைகளுக்கும் வீரர்கள் தேர்வு செய்யப்படும் திட்டம் கடந்தாண்டு ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ராணுவத்தில் 19,000 பேரும், கடற்படை மற்றும் விமானப்படையில் தலா 3,000 பேர் என மொத்தம் 25,000 பேர் ஏற்கெனவே பயிற்சி பெறுகின்றனர்.
அக்னி வீரர்கள் திட்டத்தில் இனி முதலில் ஆன்லைன் முறையில் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.