பெரம்பூர்: வியாசர்பாடியை சேர்ந்தவர் 33 வயது பெண், புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், தனக்கு திருமணமாகி 15 வயதில் 11ம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளதாகவும், தனது மகளை புளியந்தோப்பு அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (19) கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்தார். பலமுறை கண்டித்தும் தொடர்ந்து 2 பேரும் பேசி வந்த நிலையில், எனது மகளை வெளியே அழைத்து சென்று, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார்.இதனால், தற்போது எனது மகள் கர்ப்பமாக உள்ளதாகவும், மேலும் அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு எழும்பூர் மகளிர் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறி புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். ேபாலீசார் வழக்கு பதிவு செய்து, விக்னேஷை தேடி வருகின்றனர்.
பெரம்பூர்: வியாசர்பாடியை சேர்ந்தவர் 33 வயது பெண், புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், தனக்கு திருமணமாகி 15 வயதில் 11ம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளதாகவும், தனது மகளை புளியந்தோப்பு அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (19) கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்தார். பலமுறை கண்டித்தும் தொடர்ந்து 2 பேரும் பேசி வந்த நிலையில், எனது மகளை வெளியே அழைத்து சென்று, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார்.இதனால், தற்போது எனது மகள் கர்ப்பமாக உள்ளதாகவும், மேலும் அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு எழும்பூர் மகளிர் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறி புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். ேபாலீசார் வழக்கு பதிவு செய்து, விக்னேஷை தேடி வருகின்றனர்.