வேளச்சேரி: ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி மினி (25). இவர்கள் பள்ளிக்கரணை, பவானி அம்மன் கோயில் தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கி, கட்டிட வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு, பாபு மது குடிப்பதற்காக மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பாபு, சமையல் அறை அடுப்பில் கொதித்து கொண்டிருந்த வெந்நீரை எடுத்து மனைவி மீது ஊற்றியுள்ளார். இதில் உடல் வெந்து வலி தாங்க முடியாமல் மினி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர் இதையடுத்து, பாபு அங்கிருந்து தப்பி ஓடினார். இதையடுத்து, படுகாயமடைந்த மினியை மீட்டு, உடனடியாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின்படி, பள்ளிக்கரணை போலீசார் வழக்குபதிவு செய்து பாபுவை தீவிரமாக தேடி வருகின்றனர்.
வேளச்சேரி: ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி மினி (25). இவர்கள் பள்ளிக்கரணை, பவானி அம்மன் கோயில் தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கி, கட்டிட வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு, பாபு மது குடிப்பதற்காக மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பாபு, சமையல் அறை அடுப்பில் கொதித்து கொண்டிருந்த வெந்நீரை எடுத்து மனைவி மீது ஊற்றியுள்ளார். இதில் உடல் வெந்து வலி தாங்க முடியாமல் மினி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர் இதையடுத்து, பாபு அங்கிருந்து தப்பி ஓடினார். இதையடுத்து, படுகாயமடைந்த மினியை மீட்டு, உடனடியாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின்படி, பள்ளிக்கரணை போலீசார் வழக்குபதிவு செய்து பாபுவை தீவிரமாக தேடி வருகின்றனர்.